சாகித்திய விருதுகளை குவித்த தமிழர்கள்.. மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து!

Dr Ramadoss: சாகித்திய விருதுகளை பெற்றுள்ள இரு தமிழர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published on: June 20, 2025 at 10:57 am

சென்னை, ஜூன் 20 2025: சாகத்திய அகடாமி விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில், “சாகித்திய புரஸ்கார் 2025 இந்த ஆண்டிற்கான விருதுகளை பெற்ற இரு தமிழர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்! சாகித்ய அகாடமியின் 2025 ம் ஆண்டு தமிழ் மொழிக்கான “பால சாகித்ய புரஸ்கார் விருது ‘ஒற்றைச்சிறகு ஓவியா’என்ற சிறுவர் நாவலுக்காக திருவாரூர் மாவட்டம், விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், “கூத்தொன்று கூடிற்று” என்ற சிறுகதைத் தொகுப்புக்காக “யுவ புரஸ்கார் விருது” மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் திரு. லட்சுமிஹர் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். சாகத்திய அகடாமி விருதினை முதல் முதலாக தமிழ்நாட்டில் இருந்து மு.வரதராசனார் அவர்கள் அவர்களுடைய “அகல் விளக்கு” என்ற நாவலுக்காக 1961ம் ஆண்டு பெற்றார்கள்.

அதன் பிறகு பல்வேறு தமிழறிஞர்கள் அவருடைய படைப்புகளுக்காக இன்றுவரை சாத்திய அகடமியால் வழங்கப்படும் விருதுகளை வாங்கி குவித்து வரும் வேளையில் மேலும் தமிழகத்தைச் சேர்ந்த இந்த இருவரும் இந்த விருதுகளை பெற்றிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும்.. மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!
Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு ஏன்? அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss

மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com