காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!

Anbumani Ramadoss: “தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், “காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

Published on: August 17, 2025 at 11:55 am

சென்னை, ஆக.17 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆக.16 (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், “தருமபுரி மாவட்டத்தில் அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரு நாள் பயணமாக இன்று தருமபுரி நகருக்கு வருகை தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முறையாவது தருமபுரி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை அவர் வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பல மாவட்டங்களுக்கு செல்லும் போதெல்லாம் ‘‘எனக்கு வாக்களித்த மக்கள் வருந்தாத அளவிற்கும், வாக்களிக்காதவர்கள் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தும் அளவிற்கும் எனது பணி இருக்கும்’’ என்று வசனம் பேசி வருகிறார். இந்த வசனத்தைக் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் அது உண்மையில்லை.

2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சிகள் வீழ்த்தப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தான் தருமபுரி மாவட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்து வருகிறார்” எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “தருமபுரி மாவட்ட மக்களும் தமிழ்நாட்டின் குடிமக்கள் தான். அவர்கள் செலுத்தும் வரியில் தான் அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரும், அமைச்சர்களும் அனுபவிக்கும் பல்வேறு வசதிகளுக்கு செலவு செய்யப்படும் நிதியில் அவர்களின் வரிப்பணமும் உள்ளது. இவற்றையெல்லாம் அனுபவித்துக் கொண்டு அவர்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களை பழிவாங்குவதும், அவர்கள் மீது வன்மத்தைக் காட்டுவதும் நியாயமல்ல.

அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைவிட்டு தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்குத் தேவையான தருமபுரி& காவிரி உபரிநீர் திட்டம், சிப்காட் தொழில்வளாகம் ஆகியவற்றை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு , தருமபுரி & மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை நாளைய விழாவில் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்.. இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com