Dr Ramadoss: ”கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Dr Ramadoss: ”கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Published on: September 10, 2025 at 7:32 pm
சென்னை, செப்.10 2025: பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் கடந்த 5-ஆம் தேதி நடந்த விபத்தில், பயங்கர சத்தத்துடன் நச்சுப் புகை வெளியேறி அருகில் இருந்த குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 90 பேர் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், மயக்கம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே தொழிற்சாலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற விபத்துகளின் போது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அபாயகரமான ரசாயனங்கள் குறித்து கடலூர், சிதம்பரம், புதுச்சேரியில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு கூட தெரிவிப்பதில்லை. இதனால் மாற்று மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக பெற முடியாமல் உயிர்களுக்கு ஆபத்து நேர்கிறது.
எனவே, நச்சு வாயுக்கள் வெளியேறுவது, விபத்துக்கள் நடப்பது போன்ற சமயங்களில் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாக, விபத்துக்கு தகுந்த மாதிரி அபாய சங்குகள் மாறி மாறி ஒலிக்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “ பாதிப்புகளை தடுக்க தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், அருகாமையில் வசிப்பவர்கள், பொதுமக்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகள், நோய்ப் பரவல்கள், நோய்களின் தன்மைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். மேலும் எந்தெந்த தொழிற்சாலைகள் எந்தெந்த விதமான வேதிப்பொருட்களை, வாயுக்களை, கழிவுகளை வெளியேற்றுகின்றன. அவைகள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றனவா? என்பவற்றை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க ; கொடுப்பது ரூ.131, பறிப்பது ரூ.275: தி.மு.க.வை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com