மதுரை, மார்ச் 5, 2026: கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்கள், நில அளவு, குத்தகை காலம் உள்ளிட்ட தகவல்களை இந்து சமய அறநிலைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், கோவில் சொத்துக்கள் தொடர்பான மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நிலங்கள் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பொது ஏலத்தின் மூலம் மட்டுமே குத்தகைக்கு விடப்பட வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், “கோவில் சொத்துகள் 5 ஆண்டுகளை மீறி குத்தகைக்கு விடப்படாமல் சட்ட விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து, “கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்கள், நில அளவு, குத்தகை காலம், குத்தகையாளர் விவரம் மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை துறையின் இந்து சமய அறநிலைய இணையதளத்தில் வெளியிட வேண்டும்” எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தனது உத்தரவில் தெரிவித்து இருந்தது.
இதையும் படிங்க: தி.மு.க கூட்டணி உடையாதா என ஏக்கம்? மு.க ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்