MK Stalin Delhi visit: டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 24 2025) கலந்துகொள்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
MK Stalin Delhi visit: டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மே 24 2025) கலந்துகொள்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on: May 23, 2025 at 10:54 pm
சென்னை மே 23 2025: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (மே 24 2025) சந்திக்கிறார். இந்தச் சந்திப்பு நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவேளையின் போது நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நாளை (மே 24 2025) டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டத்தில் மு.க ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
இந்த நிலையில் கூட்டத்தின் இடைவேளையின் போது மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது டெல்லி செல்வது ஏன்? டாஸ்மாக் ஊழல் வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் டெல்லி செல்வது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க : குறுவை தொகுப்புத் திட்டம்.. ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மானியம்.. அன்புமணி வலியுறுத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com