Felicitation ceremony: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 2025 மே 3ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறும் என அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
Felicitation ceremony: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 2025 மே 3ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறும் என அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
Published on: April 25, 2025 at 7:25 pm
சென்னை, ஏப்.25 2025: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா 2025 மே 3ஆம் தேதி நடைபெறும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
இந்தப் பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் கோவி செழியன் கூறுகையில், “பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மீட்டெடுத்தவர் மு.க. ஸ்டாலின். இதன் மூலம், மாநில சுயாட்சியை மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்திள்ளார்” என்றார். மேலும், “மாநில சுயாட்சியை உறுதிப்படுத்திய மு.க. ஸ்டாலினுக்கு 2025 மே 3ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றார்.
கவர்னர் துணை வேந்தர்கள் மாநாடு
இந்தச் சலசலப்புகளுக்கு மத்தியில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு இன்று (ஏப். 25 2025) உதகமண்டலத்தில் கவர்னர் ஆர்.என். ரவி தலைமையில் நடந்தது.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர் கலந்துகொண்டார். மாநாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கவர்னர் ஆர்.என். ரவி விமர்சித்தார்.
இதையும் படிங்க : வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு; அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com