Edappadi Palaniswami: பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அப்போது தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றார்.
Edappadi Palaniswami: பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அப்போது தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றார்.

Published on: October 30, 2025 at 2:30 pm
மதுரை, அக்.30, 2025: பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அப்போது தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இதே கோரிக்கையை முன்வைத்தார். இது தொடர்பான செய்திகள் அப்போது வெளியாகி இருந்தன. இந்த நிலையில் அவரிடம் செய்தியாளர்கள், டி.டி.வி தினகரன், ஓ. பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் வருகிறார்களா? என கேள்வியெழுப்பினார்கள்.
எடப்பாடி பழனிசாமி பதில்
அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘வந்தால் தானே தெரியும்” என்றார். மேலும், ஒரே காரில் வருகிறார்களா எனத் தெரியவில்லை. ஒரே காரில் வந்தால் சொல்கிறேன் என்றார். இந்நிலையில், தேவர் நினைவிடம் அருகே செங்கோட்டையன், டி.டி.வி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் மூவரும் ஒன்றாக இணைந்து தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு ஒன்றாக மாலை அணிவித்தனர்.
இதையும் படிங்க : ஒளிவு மறைவின்றி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.. எந்த முறைகேடும் நடைபெறவில்லை.. கே.என். நேரு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com