T20 World Cup: வருண் சக்கரவர்த்தி சேப்பாக்கத்தில் மீண்டும் களம் காண்கிறார்.
T20 World Cup: வருண் சக்கரவர்த்தி சேப்பாக்கத்தில் மீண்டும் களம் காண்கிறார்.

Published on: February 25, 2026 at 2:34 pm
Updated on: February 25, 2026 at 2:35 pm
சென்னை, பிப்.25, 2026: இந்திய கிரிக்கெட்டர் வருண் சக்ரவர்த்தி மீண்டும் சேப்பாக்கில் களமிறங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, இந்தியாவின் “மிஸ்டரி ஸ்பின்னர்” என அறியப்படும் வருண் சக்கரவர்த்தி தனது சொந்த மைதானத்தில் களம் காண்கிறார். சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான முக்கியமான வெற்றி பெற வேண்டிய போட்டியில் அவர் ஆடுகிறார்.
வருண் சக்கரவர்த்தி மீது எதிர்பார்ப்பு
இதையும் படிங்க: டி20 உலக கோப்பை கிரிக்கெட்.. இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி.. சாதித்த ஹாரி
தென்னாப்பிரிக்கா தோல்வி
டி-20 கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இதனால், இந்தியாவுக்கு அரையிறுதி சிக்கலாகியுள்ளது. ஆகவே வரும் போட்டியில், ஜஸ்ப்ரீத் பும்ரா இருந்தாலும், நடுப்பகுதி ஓவர்களில் இந்தியா பெரிதும் வருண் மீது நம்பிக்கை வைக்கிறது. மேலும், பிளான் பி மாற்று திட்டம் இந்தியாவிடம் நம்பகமாக இல்லை என்பதே வெளிப்பட்ட உண்மை ஆகும்.
இதனால், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் வருண் சக்ரவர்த்திக்குப் பெரும் சவாலாகவும், இந்திய அணிக்குப் பெரும் சோதனையாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகளிர் உலக கோப்பை 2026.. முதல் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதல்.. முழு அட்டவணை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com