Satwik & Chirag: சத்விக்சிராஜ் ரங்கரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, தோள்பட்டை பிரச்சினையை காரணமாகக் காட்டி சுவிஸ் ஓபன் போட்டியிலிருந்து விலகினர்.
Satwik & Chirag: சத்விக்சிராஜ் ரங்கரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, தோள்பட்டை பிரச்சினையை காரணமாகக் காட்டி சுவிஸ் ஓபன் போட்டியிலிருந்து விலகினர்.

Published on: March 14, 2026 at 3:26 pm
புதுடெல்லி மார்ச் 14, 2026;பேட்மிண்டனில், இந்தியாவின் முதலிடம் பெற்ற ஆண்கள் இரட்டையர் ஜோடி சத்விக்சிராஜ் ரங்கரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, பாசல் நகரில் நடைபெறும் சுவிஸ் ஓபன் போட்டியில் காலிறுதி ஆட்டத்திற்கு முன்பாக, சத்விக்சிராஜின் தோள்பட்டை பிரச்சினை காரணமாக விலகினர். சத்விக் மற்றும் சிறாக், காலிறுதியில் டென்மார்க்கின் கிறிஸ்டியன் ஃபாஸ்ட் க்யார் மற்றும் ராஸ்மஸ் க்யார் ஆகியோருடன் மோதவிருந்தனர்.
நேற்று நடைபெற்ற 16-வது சுற்று ஆட்டத்தில், ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா மற்றும் க்யோஹெய் யமஷிதா ஆகியோருக்கு எதிராக கடுமையான மூன்று செட் போராட்டத்தில் 21-15, 15-21, 28-26 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.
இதற்கிடையில் ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் தருண் மன்னேப்பள்ளி, இன்று காலை இந்தோனேஷியாவின் ஆன்டனி ஜின்டிங்கை எதிர்கொள்ள உள்ளார். இன்று நடைபெற்ற 16-வது சுற்று ஆட்டத்தில், தருண் அமைதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மலேசியாவின் ஜஸ்டின் ஹோவை 21-14, 22-20 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதையும் படிங்க; FIH ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டி.. இந்தியா இங்கிலாந்து இன்று மோதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com