மும்பையில் ஐ.பி.எல் ஒளிபரப்பு என்ஜினீயர் மரணம்.. போலீஸ் விசாரணை!

IPL 2026 : ஐபிஎல் இங்கிலாந்து ஒளிபரப்பு பொறியாளர் மும்பை ஹோட்டலில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Published on: April 1, 2026 at 10:43 pm

மும்பை, ஏப்.1, 2026: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒளிபரப்பு பொறியாளர், தென் மும்பையில் உள்ள ஹோட்டல் அறையில் திங்கட்கிழமை உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் வில்லியம் லாங்க்ஃபோர்ட் (76) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் IPL போட்டிகளை ஒளிபரப்புவதற்காக இந்தியா வந்திருந்தார். திங்கட்கிழமை, டிரைடண்ட் ஹோட்டல் அறையில் மயக்க நிலையில் கிடைத்தார். பின்னர் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

லாங்க்ஃபோர்ட் மார்ச் 24 முதல் அந்த ஹோட்டலில் தங்கியிருந்தார். மார்ச் 29 அன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில் அவர் பணியாற்றியிருந்தார்.

போட்டி முடிந்ததும் அவர் டிரைடண்ட் ஹோட்டல் அறை எண் 2715-க்கு திரும்பினார். மார்ச் 30 காலை, ரிசெப்ஷனிஸ்ட் அவரது அறைக்கு அழைத்தபோது பதில் இல்லை. பின்னர் ஹோட்டல் ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை என்று கண்டறிந்தனர்.

விசாரணை

இந்த நிலையில் இவரின் மரணம் குறித்து போலீசார் வழக்கப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க: தோனி ஊரில் ஹாக்கி போட்டிகள்.. களை கட்டும் சப் ஜூனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com