India beat Sri Lanka: 4வது டி-20 போட்டியிலும் இலங்கையை வீழ்த்திய இந்தியா.. ஆட்ட நாயகி யார் தெரியுமா?
India beat Sri Lanka: 4வது டி-20 போட்டியிலும் இலங்கையை வீழ்த்திய இந்தியா.. ஆட்ட நாயகி யார் தெரியுமா?

Published on: December 29, 2025 at 1:22 pm
திருவனந்தபுரம், டிச.29, 2025: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் நான்காவது ஆட்டத்தில், இந்தியா இலங்கையை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-0 முன்னிலை பெற்று திகழ்கிறது.
ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இந்திய அணி, மீண்டும் ஆட்டத்தின் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. முதலில் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்த இந்தியா, பின்னர் இலங்கையை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்களில் கட்டுப்படுத்தியது. இலங்கை கேப்டன் சாமரி அட்டப்பட் 52 ரன்கள் அடித்து போராட்டமான அரைசதம் விளாசினார். தொடக்க வீராங்கனை ஹசினி பெரேரா 33 ரன்கள் சேர்த்தார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் வைஷ்ணவி சர்மா 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக விளங்கினார். அருந்ததி ரெட்டி 2 விக்கெட்டுகள், ஸ்ரீ சாரணி 1 விக்கெட் பெற்றனர். முன்னதாக, இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகி
இந்திய தொடக்க வீராங்கனைகள் வலுவான தொடக்கத்தை அளித்தனர். ஸ்மிரிதி மந்தனா 87 ரன்கள், ஷபாலி வர்மா 79 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 40 ரன்கள் அடித்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். ஸ்மிரிதி மந்தனா ஆட்ட சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார். மேலும், அவர் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை நிறைவு செய்தார். தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி நாளை (டிச.30, 2025) அதே இடத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : டெல்லியில் பாரா ஸ்போர்ட்ஸ் போட்டிகள்.. வெற்றியாளர்கள் முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com