Mahendra Singh Dhoni: இந்திய கிரிக்கெட்டர்கள் விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 2027 உலக கோப்பையில் ஆடுவார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடம் மீண்டும் எழுந்துள்ளது.
Mahendra Singh Dhoni: இந்திய கிரிக்கெட்டர்கள் விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 2027 உலக கோப்பையில் ஆடுவார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடம் மீண்டும் எழுந்துள்ளது.

Published on: February 4, 2026 at 1:58 pm
புதுடெல்லி, பிப்.4, 2026: இந்திய கிரிக்கெட்டர்கள் “விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா?” என்ற சூடான கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை, விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களாக திகழ்கின்றனர்.
அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்திலும் அவர்களை மிஞ்ச ஆளில்லை என்பது தெளிவாகிறது. இதற்கிடையில், கோலி மற்றும் ரோகித் ரசிகர்களுக்கிடையேயான “பேன்வார்ஸ்” நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிறகும் அது நீடிக்கும் என்றே தெரிகிறது.
. உண்மையில், இந்திய கிரிக்கெட்டில் மற்றவர்களை விட பெரிய நான்கு பெயர்கள் மட்டுமே உள்ளன – சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, கோலி மற்றும் ரோகித் ஆகும்.
இதில், அதிர்ஷ்டவசமாக, அந்த நான்கு பேரும் ஒரே மேடையில் பேசப்பட்டனர். தோனியை பொறுத்தமட்டில், அவர் கிரிக்கெட் குறித்து ஏராளமாக பேசியிருப்பதால், அதிலிருந்து விலக முயற்சிக்கிறார். எனினும் அவரை சுற்றி கிரிக்கெட் கேள்விகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் ஜடின் சப்ரு, மகேந்திர சிங் தோனியிடம், ““கோலி மற்றும் ரோஹித் அடுத்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் அந்த விமானத்தில் இடம் பெறும் திறன் கொண்டவர்களா?” என்றார்.
முதலில் இந்தக் கேள்வியை தவிர்க்கவே தோனி விரும்பினார். இதற்குப் பதிலளித்த தோனி, “ஏன் முடியாது?” என்றார்.
மேலும், ““பாருங்கள், விஷயம் என்னவென்றால், அடுத்த உலகக் கோப்பையில் யாராவது விளையாடக்கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும்? என்னைப் பொறுத்தவரை, வயது ஒரு அளவுகோல் அல்ல. திறமையும் உடல் நலனும் தான் முக்கியம். எனவே, யாருக்கும் எதுவும் சொல்லப்படக் கூடாது என்று நான் எப்போதும் நினைக்கிறேன்.
நான் இந்தியாவுக்காக அறிமுகமானபோது, எனக்கு 24 வயது. யாரும் வந்து எனக்கு எதுவும் சொல்லவில்லை. எனவே, நான் இந்தியாவுக்காக 1, 2, 5 அல்லது 10 ஆண்டுகள் விளையாடினேன். அப்போதும் என் வயதை பற்றி யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. சொல்ல தேவையும் இல்லை. வயதை விட உடல்நலம்தான் முக்கியம்” என்றார்.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை வர்றோம்.. ஆனால் இந்தியாவுடன் ஆட மாட்டோம்.. பாகிஸ்தான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com