IPL 2025: இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் 2025 போட்டிகள் ஒருவார காலம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
IPL 2025: இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் 2025 போட்டிகள் ஒருவார காலம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Published on: May 9, 2025 at 3:35 pm
புதுடெல்லி, மே 9 2025: இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் முழுமையான ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நடந்து வரும் டாடா ஐ.பி.எல் (TATA IPL) 2025 ஐ ஒரு வாரத்திற்கு உடனடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. புதிய அட்டவணை மற்றும் இடங்கள் அடுத்த வாரம் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், “இந்த நெருக்கடியான நேரத்தில் பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது” என்று வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “இந்திய அரசு, ஆயுதப்படைகள் மற்றும் நமது நாட்டு மக்களுடன் நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். நமது ஆயுதப்படைகளின் துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவை பெருமையை தருகிறது” என்றார்.
இந்த நிலையில், ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஜியோஸ்டாருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து இணை கூட்டாளிகள் மற்றும் பங்குதாரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி; என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com