‘துப்பாக்கியை காட்டி குடும்பத்தினரை மிரட்டினார்’: முன்னாள் டி.ஐ.ஜி கொலை வழக்கில் மனைவி வாக்குமூலம்!

Former Karnataka DGP Om Prakash murder case: கர்நாடக முன்னாள் டி.ஜி.பி குடும்பத்தினரை துப்பாக்கியால் மிரட்டினார் என கொலைக்கு காரணமான மனைவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Published on: April 22, 2025 at 12:50 pm

Updated on: April 22, 2025 at 1:20 pm

பெங்களூரு, ஏப்.22 2025: பெங்களூருவில் முன்னாள் கர்நாடக மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் தனது மனைவியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் கர்நாடக மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

இந்த சம்பவத்தில் அவரது மனைவி பல்லவி மற்றும் மகள் கிருதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ சம்பவம் நடந்தபோது அவரின் மகன் கார்த்திகேஷ் வீட்டில் இல்லாததாகவும், அவர் வீடு திரும்பியபோது ஓம் பிரகாஷ் தரையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஓம் பிரகாஷின் மனைவி, பல்லவி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ஓம் பிரகாஷ் துப்பாக்கியுடன் வீட்டிற்கு வந்து தன்னையும் மகளையும் கொலை செய்வதாக மிரட்டியதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ‘அரக்கனை கொன்று விட்டேன்’; வீடியோ காலில் பேசிய முன்னாள் டிஐஜி மனைவி..!

அன்று காலை குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் போது, ஓம் பிரகாஷ் துப்பாக்கியால் மிரட்டியதாகவும், தன்னையும் மகளின் உயிரையும் காப்பாற்றிக்கொள்வதற்காக அவரை கத்தியால் குத்தியதாக பல்லவி தெரிவித்துள்ளார்.​ முன்னதாக, ஓம் பிரகாஷ் மற்றும் பல்லவி இடையே நில விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

பல்லவி மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் ஓம் பிரகாஷ் மீது புகார் அளிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.​ ஓம் பிரகாஷின் மகன் கார்த்திகேஷ், தனது தாய் பல்லவி கடந்த ஒரு வாரமாக தந்தையை கொலை செய்யப்போவதாக மிரட்டியதாகவும், இந்த கொலையில் தாய் மற்றும் சகோதரி கிரிதி தொடர்புடையவர்கள் என சந்தேகிப்பதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக முன்னாள் டி.ஜி.பி கொலை வழக்கில் துப்பாக்கியைக் காட்டி கொலை செய்வதாக மிரட்டியதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் மீதான ராகுலின் குற்றச்சாட்டு விரக்தியின் வெளிப்பாடு: தேவேந்திர ஃபட்னாவிஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com