பேராசிரியர் அலி கான் விடுதலை.. சிறையில் இருந்து வெளியேறினார்!

Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத் சோனிபட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Published on: May 22, 2025 at 7:12 pm

Updated on: May 22, 2025 at 7:25 pm

புதுடெல்லி, மே 22 2025: அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத் சோனிபட் சிறையில் இருந்து இன்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டார். முன்னதாக, உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 21 2025) அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

2025 மே 18ஆம் தேதி பேராசிரியர் அலி கான் சமூக வலைதளத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பதிவு ஒன்றை தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
மேலும், பேராசிரியர் அலி கான், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்துக்கள் தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் புகாரின் அடிப்படையில் ஹரியானா போலீசார் பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர் ஜாமின் கோரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
இந்த நிலையில் பேராசிரியர் அலி கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஏப்.22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற பகுதியில் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவத்தால் நிறைவேற்றப்பட்டது. இதனை விமர்சித்து பேராசிரியர் அலி கான் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தலைக்கு ரூ.1 கோடி அறிவிப்பு.. மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் உள்பட 27 பேர் பலி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com