தொழில்நுட்ப முன்னோடி நாடு இந்தியா.. பிரதமர் நரேந்திர மோடி

Emerging Science & Technology Innovation Conclave 2025: இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Published on: November 3, 2025 at 5:58 pm

புதுடெல்லி, நவ.3, 2025: பிரதமர் நரேந்திர மோடி, “பெறும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமை மாநாட்டை” டெல்லியில் தொடங்கிவைத்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.3, 2025), இந்தியா இனி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடு மட்டுமல்ல, தொழில்நுட்ப மாற்றத்திற்கு முன்னோடியான நாடாக மாறியுள்ளது” என்றார்.

2025 ஆம் ஆண்டுக்கான எழுச்சி பெறும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமை மாநாட்டை (Emerging Science and Technology Innovation Conclave 2025) டெல்லி பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் புதுமை சார்ந்த நவீன சூழலை உருவாக்க அரசு ஆராய்ச்சி செய்யும் வசதியை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
மேலும், உலகின் மிகச் சிறந்த டிஜிட்டல் பொது கட்டமைப்பு இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டை புதுமை மையமாக மாற்ற கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் முடிவுகள் இப்போது பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த ஒரு தசாப்தத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகள் இரட்டிப்பாக உயர்ந்துள்ளன; பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகள் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலாக மாறியுள்ளது. சுத்த ஆற்றல் மற்றும் மேம்பட்ட பொருட்கள் போன்ற துறைகளில் 6,000 க்கும் மேற்பட்ட டீப்-டெக் ஸ்டார்ட்அப்கள் செயல்படுகின்றன.

இந்தியாவின் செமிகண்டக்டர் துறை ஒரு மாற்றத்தைக் கண்டுள்ளது. 2014 இல் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த உயிர் பொருளாதாரம் (bio-economy) தற்போது சுமார் 140 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்துள்ளது.

கிரீன் ஹைட்ரஜன், குவாண்டம் கணிப்பொறி, ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் முக்கிய கனிமங்கள் போன்ற எழுச்சி பெறும் துறைகளில் இந்தியா முக்கிய முன்னேற்றங்களை அடைந்து, இத்துறைகளில் உறுதியான நிலையை இந்தியா பெற்றுள்ளது” என்றார்.

மேலும், “நவீன புதுமை சூழலை உருவாக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஆராய்ச்சி செய்யும் வசதியை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகிறது.
ஆய்வகத்தில் உருவாகும் மாதிரிகளை விரைவாக சந்தைக்கு கொண்டு செல்லும் வகையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இதையும் படிங்க : 2 நாள் பயணம்.. கேரளா சென்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com