Jammu Kashmir: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
Jammu Kashmir: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
Published on: April 26, 2025 at 11:04 am
ஜம்மு, ஏப்.26 2025: காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
அதாவது, இந்திய துருப்புக்கள் சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி தகுந்த முறையில் பதிலடி கொடுத்ததாகவும், இந்த சம்பவத்தின் போது யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், “ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் தேதி இரவு, காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு முழுவதும் பல்வேறு பாகிஸ்தான் இராணுவ நிலைகளால் தூண்டுதலற்ற சிறிய ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு, இந்திய துருப்புக்கள் சிறிய ஆயுதங்களுடன் தகுந்த பதிலடி கொடுத்தனர்” என்றார்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உள்ளூரை சேர்ந்த ஒருவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்.26 2025) இந்தியப் படைகளால் இரண்டு பயங்கரவாத கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் இல்லங்கள் IED கொண்டு தகர்ப்பு..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com