Pahalgam terror attack: ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் உள்ளூர் உளவுத்துறை வட்டாரங்களின் தோல்வி’ என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Pahalgam terror attack: ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் உள்ளூர் உளவுத்துறை வட்டாரங்களின் தோல்வி’ என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Published on: April 24, 2025 at 10:18 am
Updated on: April 24, 2025 at 10:20 am
புதுடெல்லி, ஏப்.24 2025: முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்திய அரசாங்கம் முதலில் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளை வேட்டையாட வேண்டும்” என்றார்.
மேலும், ”சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை கவனமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் அவர தெரிவித்தார். தொடர்ந்து, இந்தத் தாக்குதல் உள்ளூர் உளவுத்துறையின் தோல்வி என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சி அரசாங்கத்தின் முடிவுக்கு முழு ஆதரவையும் வழங்கும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தொடர்ந்து, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை பெரும்பாலான மக்கள் ஒப்புக்கொண்டாலும், வன்முறை நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் இன்னும் சிலர் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை (ஏப்.25 2025) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்,
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியது. இது காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்துமா? என்று கேட்டபோது, இரண்டும் தனித்தனி பிரச்சினைகள் என்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒற்றுமை நடவடிக்கை: ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com