Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும், 50 பேர் காயமுற்றனர்.
Lord Jagannath Rath Yatra stampede: ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் இன்று (ஜூன் 29 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும், 50 பேர் காயமுற்றனர்.
Published on: June 29, 2025 at 8:22 pm
புவனேஸ்வர், ஜூன் 29 2025: ஒடிசா மாநிலத்தின் பூரியில் உள்ள ஸ்ரீ கண்டிச்சா கோயில் அருகே ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் வரை காயமடைந்தனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4-4.30 மணியளவில் அதிக கூட்ட நெரிசலுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து பேசிய பூரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் எஸ். ஸ்வைன், “ஸ்ரீ கண்டிச்சா கோயில் அருகே நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது” எனத் தெரிவித்தார்.
இறந்தவர்கள் யார் யார்?
இறந்தவர்கள் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிவா தாஸ் பெண் (52), பிரேமகாந்த மொஹந்தி (78) மற்றும் பசந்தி சாஹு (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் சாரதாபலி அருகே, கோயிலுக்கு முன்னால் நடந்துள்ளது. ஜெகந்நாதர் தேர் தரிசனத்தின் போது கூட்டம் கட்டுப்படுத்த முடியாததாக மாறியது. குழப்பத்தில் பலர் விழுந்து மிதிக்கப்பட்டனர் என நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
இதையும் படிங்க : ஷாதி.காம் நிறுவனர் மீது மோசடி வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com