Pahalgam Terror Attack: ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க தேசிய மகளிர் ஆணையம் உறுதிபூண்டுள்ளது,” என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
Pahalgam Terror Attack: ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க தேசிய மகளிர் ஆணையம் உறுதிபூண்டுள்ளது,” என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
Published on: May 5, 2025 at 10:23 am
புதுடெல்லி, மே 5 2025: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷிக்கு ஆதரவாக தேசிய மகளிர் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. ஒரு பெண்ணின் சித்தாந்த வெளிப்பாட்டிற்காக அவரை கேலி செய்வது “எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய கடற்படை அதிகாரியின் மனைவி தனது முதல் கருத்துக்களில், “முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது வெறுப்பு கொள்ள வேண்டாம்” என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் அருகே பைசரனில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் வினய் நர்வாலும் ஹிமான்ஷியும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தேனிலவுக்கு அவர்கள் ஜம்மு காஷ்மீர் சென்ற போது, வினய் நர்வால் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், ஹிமான்ஷி ஒரு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் விடுத்தார். அதில், “அவர் (வினய்) எங்கிருந்தாலும், நிம்மதியாக இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதுதான் நான் விரும்புகிறேன்.
எனக்கு இன்னும் ஒன்று இருக்கிறது. யாரிடமும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பைக் கக்குவதை நான் காண்கிறேன். எங்களுக்கு இது வேண்டாம். எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும்” என்றார்.
இந்தக் கருத்துக்களுக்கு அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த நிலையில் மகளிர் ஆணையம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளது. அதில், “ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க தேசிய மகளிர் ஆணையம் உறுதிபூண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிமான்ஷி மீதான தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு எனவும் தெரிவித்துள்ளது. ஹிமான்ஷி கணவர் வினய்யை அவரின் மதத்தை கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய இரகசியங்கள் பரிமாற்றம்: பஞ்சாப்பில் இருவர் கைது.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com