பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. குற்றப் பத்திரிகையில் இடம்பெற்ற 3 பெயர்கள்.. முழு விவரம்!

Pahalgam Terror Attack Case: பஹல்காம் தாக்குதல் வழக்கில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Published on: December 16, 2025 at 2:18 pm

ஜம்மு, டிச.16, 2025: தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஏப்ரல் 22 பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக திங்கள்கிழமை (டிச.15, 2025) ஜம்முவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் பாகிஸ்தான் சார்ந்த லஷ்கர்-ஏ-தைபா (LeT) மற்றும் அதன் துணை அமைப்பு த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஆகியவை தீவிரவாத அமைப்பாகக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மத அடிப்படையிலான குறிவைத்த கொலைகளை மேற்கொண்டதாகவும், இதில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் பொதுமகன் உயிரிழந்ததாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில், லஷ்கர்-ஏ-தைபா தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் TRF தலைவர் ஹபீபுல்லா மாலிக் (சாஜித் ஜட் எனவும் அழைக்கப்படுகிறார்) ஆகியோர் ஏப்ரல் 22 பஹல்காம் பைசரன் புல்வெளியில் நடந்த தாக்குதலை திட்டமிடுவதிலும், நிறைவேற்றுவதிலும் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதி இயக்குநர் சாஜித் ஜட் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவராகவும் பெயரிடப்பட்டுள்ளார். இந்த குற்றப்பத்திரிகை 1,597 பக்கங்களைக் கொண்டது.

குற்றப்பத்திரிகையில் மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் — ஃபைசல் ஜட் (சுலேமான் ஷா), ஹபீப் தாஹிர் (ஜிப்ரான்), மற்றும் ஹம்சா ஆஃப்கானி — மத அடிப்படையில் கொலைகளை மேற்கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களை மூவரையும் பாதுகாப்பு படையினர் ஜூலை 29 அன்று ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள டாசிகாமில் நடைபெற்ற “மகாதேவ்” நடவடிக்கையின் போது கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் 1.38 லட்சம் போலி வாக்காளர்கள்.. அதிர்ச்சி தகவல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com