Mysore Bagh: ஜெய்ப்பூரில் மைசூர் பாக் என்ற வார்த்தை மாற்றப்பட்டு மைசூரு ஸ்ரீ என புதிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பாக் (பாகிஸ்தான்) என்ற பெயரை வியாபாரிகள் கைவிட்டுள்ளனர்.
Mysore Bagh: ஜெய்ப்பூரில் மைசூர் பாக் என்ற வார்த்தை மாற்றப்பட்டு மைசூரு ஸ்ரீ என புதிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பாக் (பாகிஸ்தான்) என்ற பெயரை வியாபாரிகள் கைவிட்டுள்ளனர்.
Published on: May 23, 2025 at 11:00 pm
ஜெய்ப்பூர், மே 23 2025: ராஜஸ்தான் மாநிலத்தில் மைசூர் பாக்கில் (பாக்- பாகிஸ்தான் சுருக்கம்) என வருவதால் அந்தப் பெயரை மாற்ற வியாபாரிகள் முன்வந்துள்ளனர்.
அதாவது, மைசூர் பாக் என்பதற்கு பதிலாக மைசூரூ ஸ்ரீ எனப் புதிய பெயரை சூட்டியுள்ளனர். இது குறித்து ஜெய்ப்பூர் வைசாலி நகரில் உள்ள தியோகர் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் அஞ்சலி ஜெயின் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதனை கூறினார்.
இது குறித்து பேசிய அவர், “தேசபக்தி உணர்வு எல்லையில் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்திய வீட்டிலும் இதயத்திலும் இருக்க வேண்டும்” என்றார். மேலும் இதனை பல்வேறு கடைக்காரர்களும் வரவேற்றுள்ளனர். மேலும், பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேருக்கு இது உண்மையான அஞ்சலியாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கியது.
இதில் 40 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : சோனியா, ராகுல் உடன் மு.க ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. பரபரக்கும் டெல்லி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com