பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை; இந்தியாவுடன் கைகோர்த்த நேபாளம்!

India Nepal Defense Patrol: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில், நேபாளம் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது.

Published on: May 24, 2025 at 11:59 am

புதுடெல்லி, மே 24 2025: இந்திய சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, இந்தியாவும் நேபாளமும் வெள்ளிக்கிழமை (மே 23 2025) சர்வதேச எல்லையில் கூட்டு ரோந்துப் பணியை மேற்கொண்டன. இந்தியாவின் சஷாஸ்திர சீமா பால் (SSB) மற்றும் நேபாளத்தின் ஆயுதக் காவல் படை (APF) ஆகியவை இந்த ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

ஏனெனில், இந்தியாவும் நேபாளமும் 1,700 கி.மீ.க்கும் அதிகமான எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இது குறித்து, எஸ்எஸ்பி கமாண்டன்ட் கங்கா சிங் இந்தியா டுடே ஊடகத்திடம் பேசுகையில், “கூட்டு ரோந்துப் பணியின் போது, ​​பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நேபாள வீரர்கள் எங்களுடன் உள்ளனர். நேபாளப் படைகளுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது.

ஒவ்வொரு மாதமும், இரு நாடுகளின் எல்லைப் படைகளின் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன” என்றார். மேலும், “அவர்கள் தங்கள் உளவுத்துறை தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தொடர்ந்து, சந்தேக நபர்களை அடையாளம் காணும் வகையில் எங்கள் தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க :டெல்லியில் கோவிட் அச்சம்; மருத்துவமனைகள் தயார் நிலை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com