Hyderabad hospital CEO caught in cocaine: ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி ₹5 லட்சம் மதிப்புள்ள கோகைன் வாங்கியபோது பிடிபட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hyderabad hospital CEO caught in cocaine: ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி ₹5 லட்சம் மதிப்புள்ள கோகைன் வாங்கியபோது பிடிபட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on: May 11, 2025 at 2:09 pm
ஹைதராபாத், மே 11 2025: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஒமேகா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நம்ரதா சிகுருபதி ரூ.5 லட்சம் மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் வாங்கியபோது சிக்கியுள்ளார். இவர், மும்பையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கோகையினை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரும் டெலிவரி செய்பவரும் 53 கிராம் கோகோயின் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பி.டி.ஐ வெளியிட்டுள்ள செய்தியில், “மே 8 ஆம் தேதி ஒரு உணவகம் அருகே ஒரு காரில் கோகோயின் பாக்கெட்டை மருத்துவரிடம் கொடுத்தபோது சிக்கினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோகைன் பரிமாற்றம் நடந்த போது, ராய்துர்கம் காவல்துறையினர் பெண் மருத்துவரையும் அந்த நபரையும் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஹெதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பயங்கரவாதம்.. அமைதி சாத்தியமில்லை; அசாதுதீன் ஓவைசி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com