கர்நாடகா முன்னாள் டி.ஐ.ஜி மர்ம மரணம்; போலீஸ் விசாரணை.. பரபரப்பு!

DGP Om Prakash found dead: கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published on: April 20, 2025 at 7:56 pm

பெங்களூரு, ஏப்.20 2025: கர்நாடக முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஓம் பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19 2025) பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக போலீஸ் அதிகாரிகள் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், முன்னாள் டிஜிபியின் மரணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்ந்து, அவரது மரணச் செய்தி கிடைத்ததும் மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, அவரது மரணம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. 1981 ஆம் ஆண்டு பேட்ஜ்-ஐ சேர்ந்த 68 வயதான ஐபிஎஸ் அதிகாரி, பீகார் மாநிலம் சம்பாரணைச் சேர்ந்தவர் ஆவார்.

இதையும் படிங்க : டெல்லி, தூத்துக்குடி அல்ல.. நாட்டிலேயே இங்குதான் வெப்பம் அதிகம்: எந்த இடம் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com