Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Published on: January 22, 2026 at 6:01 pm
புதுடெல்லி, ஜன.22, 2026: டெல்லி நீதிமன்றம், அரவிந்த் கேஜ்ரிவாலை இரண்டு வழக்குகளில் விடுவித்தது. அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாததால், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அவருக்கு எதிராக இ.டி. நடவடிக்கை எடுக்க முயன்றது.
ஆனால், டெல்லி நீதிமன்றம் அந்த இரண்டு வழக்குகளிலும் அவரை குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஒக்லா தொகுதி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கானையும், இ.டி (ED) வழக்கில் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்துள்ளது.
அமனத்துல்லா கான் மீது, மத்திய விசாரணை அமைப்பின் சமனுக்கு ஆஜராகாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அவர் மீது நடந்த விசாரணை, டெல்லி வக்ப் வாரியம் தொடர்பான பணமோசடி வழக்குடன் இணைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்.. 10 வீரர்கள் உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com