பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை.. ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் வீரமரணம்!

Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தார்.

Published on: January 19, 2026 at 5:26 pm

Updated on: January 19, 2026 at 5:27 pm

ஜம்மு, ஜன.19, 2026: ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளும் இடையே நடந்த மோதலில், ஒரு இராணுவ ஹவில்தார் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், “வைட் நைட் கார்ப்ஸ் தளபதி மற்றும் அனைத்து படையினரும், சிறப்பு படையணியின் ஹவில்தார் கஜேந்திர சிங் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
அவர் 19 ஜனவரி 2026 இரவு, கிஷ்ட்வாரின் சிங்க்புரா பகுதியில் நடைபெற்ற திராஷி-I பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது வீரமரணம் அடைந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை சிங்க்புரா பகுதியில் நடந்துள்ளது. அப்போது, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளும் இடையே மோதல் வெடித்ததையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது எட்டு வீரர்கள் காயமடைந்தனர்.
இது குறித்து, இராணுவ அதிகாரிகள் கூறுகையில், “திராஷி-I” என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, கிஷ்ட்வாரின் சத்த்ரூவின் வடகிழக்கில் உள்ள சோன் நார் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ‘அப்பா.. நான் பிரச்சனையில் இருக்கிறேன்’.. வாய்க்காலில் விழுந்த கார்.. சிக்கி தவித்த டெக்கி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com