பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு.. சவுதியிடம் சொல்வேன்; அசாதுதீன் ஓவைசி

Asaduddin Owaisi: பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது எனக் கூறிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இது பற்றி சவுதி அரேபியாவிடம் எடுத்துச் சொல்வேன் என்றார்.

Published on: May 24, 2025 at 12:43 pm

புதுடெல்லி, மே 24 2025: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேச, இந்திய எம்.பி.க்கள் குழு சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு செல்கிறது. இந்தக் குழுவில் ஹைதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி இடம் பெற்றுள்ளார். இந்தக் குழு முதல்கட்டமாக பஹ்ரைன் நாட்டுக்கு செல்கிறது.

அசாதுதீன் ஓவைசி பேட்டி

இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் ஏ.என்.ஐக்கு பேட்டி அளித்த அசாதுதீன் ஒவைசி எம்.பி, “பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை ஆதரித்து வருகிறது” என்றார். மேலும், தாம் இது குறித்து பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் பேசுவேன் ” என்றார். இது குறித்து பேசிய அவர், “நான் இந்த அனைத்துக் கட்சி குழுவில் உள்ளேன். முதலில், நாம் பஹ்ரைனுக்குச் செல்வோம். பின்னர் நாம் குவைத், பின்னர் சவுதி அரேபியா மற்றும் இறுதியாக அல்ஜீரியாவுக்குச் செல்வோம்” என்றார்.

தொடர்ந்து, “பஹல்காம் சம்பவம் வேதனையளிக்கிறது, நமது அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை நடத்தி அவர்களுக்கு ஆதரவளிக்கிறது. இந்த பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் வந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்” என்றார். மேலும், “இந்த நான்கு நாடுகளிடமும் இந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவோம்” என்றும் அசாதுதீன் ஓவைசி உறுதிப்பட தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர்

2025 ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை; இந்தியாவுடன் கைகோர்த்த நேபாளம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com