மலப்புரத்தில் 14 வயது சிறுமி வன்புணர்வு.. 16 வயதான சிறுவன் கைது!

Kerala: கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டார்.

Published on: January 16, 2026 at 10:29 pm

திருவனந்தபுரம், ஜன.16, 2026: கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுமி, 16 வயது சிறுவனால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. குடும்பம் கருவாரகுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. இந்நிலையில், மாலை 6 மணியளவில், சிறுமி தனது தாயிடம் “நான் அருகில்தான் இருக்கிறேன், விரைவில் வருவேன்” என்று தொலைபேசியில் கூறியிருந்தார். பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை, வானியம்பாளம் ரயில் பாதை அருகே புதருக்குள் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கைகள், கால்கள் பள்ளிப் பையைச் சேர்ந்த துணியால் கட்டப்பட்டிருந்தன. உடை, காலணியும் அருகே கிடைத்தன.

இந்த நிலையில், போலீஸ் விசாரணையில், சிறுவன் சிறுமியை தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று, கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, மூச்சுத்திணறச் செய்து கொன்றதாக ஒப்புக்கொண்டான்.
ஆரம்பத்தில், சிறுமி ரயிலால் மோதிப் இறந்ததாக கூறினான். ஆனால் உடலின் நிலை, காயங்கள், கட்டப்பட்ட அடையாளங்கள் காரணமாக சந்தேகம் எழுந்தது.

இதற்கிடையில், சிறுவன் முன்பு இரண்டு முறை சிறுமியை பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், குடும்பத்தினரை மிரட்டியதாகவும், தாயை போலீஸ் நிலையத்திலேயே எதிர்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சம்பவம் நடந்த இடம் நகரத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருந்ததால், அவர் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியிருக்கலாம் என உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், உறவினர்கள், இத்தகைய கொடூரமான குற்றத்தை ஒருவன் மட்டும் செய்திருக்க முடியாது எனக் கூறி, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக் காதலி மகனுக்கு பாலியல் தொல்லை.. சர்ஜரி செய்ய வற்புறுத்தல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com