சத்தீஸ்கரில் பெண் நக்சல்கள் திடீர் சரண்.. டி.ஐ.ஜி பரபரப்பு பேட்டி

Naxals surrendered in Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண் நக்சல்கள் உள்பட 22 நக்சலைட்டுகள் சரணடைந்தனர். இவர்கள் சுக்மா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Published on: April 18, 2025 at 4:06 pm

Updated on: April 18, 2025 at 4:07 pm

ராய்ப்பூர், ஏப்.18 2025: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஒன்பது பெண் நக்சல்கள் உட்பட 22 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். இது, பாதுகாப்பு படையினரின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து சி.ஆர்.பி.எஃப் டி.ஐ.ஜி ஆனந்த் சிங் ராஜ்புரேகித், “ஒன்பது பெண் நக்சல்கள் உட்பட 22 நக்சல்கள் இன்று சரணடைந்துள்ளனர். இவர்களில் இரண்டு நக்சல்களின் தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்தது” என்றார்.

தொடர்ந்து, “மற்ற இரண்டு நக்சல்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்தது. நக்சல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்தில் ஈடுபட்டு வருவார்கள். நக்சல்களுககு முகாம்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், அரசாங்கத்தின் மறுவாழ்வுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளனர்” என்றார்.

இதையடுத்து, “இன்று சரணடைந்த அனைவரும் பிரதான நீரோட்டத்தில் இணைவதன் மூலம் சமூகத்திற்கு சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இந்த மாவோயிஸ்டுகளுக்கு மொத்தம் ₹40.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டது. இந்த மாவோயிஸ்டுகள் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் (CRPF) மூத்த அதிகாரிகள் முன் சரணடைந்தனர். அனைத்து மாவோயிஸ்டுகளுக்கும் மாநில அரசின் மறுவாழ்வு கொள்கையின் கீழ் தலா ₹50,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, அவர்களுக்கு பிற வசதிகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2025) இதுவரை மாநிலத்தில் தனித்தனி மோதல்களில் 140 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் மர்ம பொருள் வெடிப்பு: எட்டி உதைத்த சிறுவன் உள்பட 5 பேர் காயம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com