Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் பலர் காயமுற்றுள்ளனர்.
Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் பலர் காயமுற்றுள்ளனர்.
Published on: May 12, 2025 at 10:51 am
ராய்ப்பூர், மே 12 2025: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு (மே 11 2025) லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நபர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதாவது, சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர்-பலோதாபஜார் சாலையில் சரகான் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி, டிரெய்லர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில், “ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர்-பலோதாபஜார் சாலையில் சரகான் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை விபத்து நடந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், “இந்த விபத்தில் சட்டௌட் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் சிக்கியதாகவும், அவர்கள் குடும்ப விழாவில் கலந்து கொள்ள பன்சாரி கிராமத்திற்குச் சென்றிருந்ததாகவும் திரும்பி வரும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பயங்கரவாதி இறுதிச் சடங்கில் அரசு, இராணுவ அதிகாரிகள்.. யார் யார் பங்கேற்பு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com