Chennai High Court: சென்னை உயர்நீதிமன்றம், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மீது 18 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை முடித்து, அவர் ₹4 கோடி ரூபாய் வட்டி சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Chennai High Court: சென்னை உயர்நீதிமன்றம், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மீது 18 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை முடித்து, அவர் ₹4 கோடி ரூபாய் வட்டி சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Published on: March 24, 2026 at 4:41 pm
சென்னை மார்ச் 24, 2026; 2006-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. மேலும், இந்த வழக்கு, தயாரிக்கப்படாத ஒரு தமிழ் திரைப்படத் திட்டம் தொடர்பானது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மீது 18 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை முடித்து, அவர் ₹4 கோடி ரூபாய் வட்டி சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் தீர்ப்பு
2026 மார்ச் 23 அன்று, நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே. கோவிந்தராஜன் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கினார்கள்; அதன்படி, கௌதம் வாசுதேவ் மேனன், ₹4.25 கோடி ரூபாய் மற்றும் வருடாந்திர 12% வட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு, 2008-இல் தொடங்கிய நீண்டகால சர்ச்சை தொடர்பானது. முன்னதாக, 2022-இல் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேனன் மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்றம் முழுமையாக நிராகரித்துள்ளது; இதன் மூலம், 18 ஆண்டுகளாக நீடித்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது, மேலும் இது இயக்குநர் கவுதம் மேனனுக்கு ஒரு பெரிய சட்ட பின்னடைவு எனக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம்.. துரந்தர்-2.. ரஜினிகாந்த் வாழ்த்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com