700 புள்ளிகள் இழப்பு.. ₹10 டிரில்லியன் இழப்பு? முதலீட்டாளர்கள் ஷாக்!

Share Market Today : இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது; நிப்டி 50 1% வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. வர்த்தகப் போர் அச்சத்தால் சந்தை இந்தளவு அதிர்ச்சி அடைந்தது.

Published on: January 20, 2026 at 5:53 pm

மும்பை, ஜன.20, 2026: இந்தியப் பங்குச் சந்தை கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, முதலீட்டாளர்களின் செல்வத்தில் சுமார் ₹10 டிரில்லியன் அழிந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை (ஜன.20, 2026) மேலும் வீழ்ச்சியடைந்தது. கடந்த இரண்டு அமர்வுகளில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, முதலீட்டாளர்களின் செல்வத்தில் சுமார் ₹10 டிரில்லியன் அழிந்துள்ளது.
என்எஸ்இ நிப்டி 50 25,400 மதிப்பைக் கடந்து வீழ்ச்சி கண்டது. ஜனவரியில் வெளிநாட்டு நிதிகள் தொடர்ந்து விற்பனை செய்து, ₹29,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன.

உலகளாவிய அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுங்கவரி விதிப்பதாக மிரட்டியதால், சந்தை மனநிலை மேலும் பாதிக்கப்பட்டது.
இதனால், முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளுக்கு திரும்பி, உலகளாவிய பங்குச்சந்தைகளில் அதிர்ச்சி நிலை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Budget 2026.. 2027 நிதியாண்டு நிதி பற்றாக்குறை 4.2%

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com