பிப்ரவரியில் பட்ஜெட்.. வளர்ச்சிக்கு முன்னுரிமை.. பிரதமர் மோடி ஆலோசனை!

Budget 2026: பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Published on: December 30, 2025 at 7:07 pm

புதுடெல்லி, டிச.30, 2025: டெல்லி நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார அறிஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டார். அப்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால முன்னுரிமைகள் குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.

இதில், வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு பொருளாதார நிபுணர்களின் பரிந்துரைகளை பிரதமர் கேட்டறிந்தார். மேலும், வளர்ச்சியை ஊக்குவிக்க, மாக்ரோ பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்த, புதிய சவால்களை சமாளிக்க தேவையான சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.

இதில், பொருளாதார அறிஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகள், நிதி மேலாண்மை மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், இந்த ஆலோசனை, அரசின் முக்கிய பொருளாதார முடிவுகளுக்கான முன்னோட்டமாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவின் 3வது பெரிய ஏற்றுமதி.. மின்னணு ஏற்றுமதி வளர்ச்சி – அஷ்வினி வைஷ்ணவ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com