உலக கோப்பை மகளிர் கிரிக்கெட்.. இந்திய அணி பெற்ற பரிசுத் தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?

Indian women’s cricket team: உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று கோப்பையை தனதாக்கியது இந்தியா.

Published on: November 3, 2025 at 2:58 pm

Updated on: November 3, 2025 at 3:01 pm

புதுடெல்லி, நவ.3, 2025: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்றிரவு நவி மும்பையில் நடைபெற்ற ICC பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, தங்களது முதல் உலகக் கோப்பை வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் தீப்தி ஷர்மா மற்றும் ஷபாலி வர்மா இருவரும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு துறைகளிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு தித்திப்பான வெற்றியை உறுதி செய்தனர். போட்டியை பொருத்தமட்டில் முதலில், தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

299 ரன்கள் இலக்கை நோக்கி நடைபோட்ட தென் ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் வெற்றி நிச்சயமாகத் தெரிந்தது. ஆனால், தீப்தி ஷர்மா அனெரி டெர்க்சனை வெளியேற்றியதுடன், 209/5 என்ற நிலைமையிலிருந்து 246 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி சரிந்தது. தீப்தி ஷர்மா தனது சிறப்பான பவுலிங் மூலம் இந்தியாவுக்காக திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவர் 9.3 ஓவர்களில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார், இதில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்டின் விக்கெட்டும் அடங்கும்.

ஷபாலி வர்மா 87 ரன்கள் விளாசி இந்தியாவின் 298/7 என்ற ஸ்கோரில் முக்கிய பங்கு வகித்ததுடன், பவுலிங்கிலும் 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை 246 ரன்களில் கட்டுப்படுத்தினார்.

ரூ.37.30 கோடி பரிசு

ஷபாலி வர்மா போட்டியின் சிறந்த வீராங்கனை விருதைப் பெற்றார், தீப்தி ஷர்மா தொடரின் சிறந்த வீராங்கனை விருதைப் பெற்றார். வெற்றியடைந்த இந்திய அணிக்கு இதுவரை இல்லாத அளவான ₹37.3 கோடி பரிசுப் பணம் வழங்கப்பட்டது. மேலும், இது முந்தைய முறையைவிட 239 சதவீத வளர்ச்சியை குறிக்கிறது. இந்த தொடரின் வெற்றி மற்றும் இந்தியாவின் சாம்பியன் பட்டம் பெண்கள் கிரிக்கெட்டின் பார்வை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரிதும் உயர்த்தியுள்ளது.

பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஐ.சி.சி. பெண்கள் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான வெற்றிக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “இந்த வரலாற்று தருணம் பெண்கள் கிரிக்கெட்டை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

வீராங்கனைகள் தங்கள் உறுதி மற்றும் ஊக்கமளிக்கும் செயல்திறனால் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்து இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது செய்தியில், “இது ஒரு கண்கவர் வெற்றி என்றும், எதிர்கால சாம்பியன்கள் விளையாட்டைத் தேர்வு செய்ய ஊக்கமளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க :பாகிஸ்தான் ஜென்மபூமி, இந்தியா மாத்ருபூமி.. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com