மராத்தியில் பேசு.. ரெஸ்டாரெண்ட் உரிமையாளருக்கு அறை!

Maharashtra: மராத்தியில் பேசு எனக் கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளரை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: July 2, 2025 at 11:06 am

Updated on: July 2, 2025 at 11:07 am

மும்பை, ஜூலை 2.2025: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் மராத்தி பேசத் தெரியாததற்காக, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தொண்டர்கள் ஒரு வயதான வட இந்திய உணவக உரிமையாளரைத் தாக்கினர்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தின் காணொலியில், எம்.என்.எஸ் கட்சி தொண்டர்கள், ரெஸ்டாரெண்ட் கடை உரிமையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் அவரை தாக்குவது பதிவாகியுள்ளது.

மேலும் மார் கயாஹே (கொன்று விடுவோம்) எனவும் அந்த கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அப்போது, அந்த கடை உரிமையாளர் தனக்கு மராத்தி தெரியாது என்றார்.
இதற்கு பதிலளித்த எம்.என்.எஸ் தொண்டர்கள் ஒரு மாநிலத்துக்கு சென்றால் அந்த மாநில மொழியை படித்து விற்பனை செய்ய மாட்டாயா? எனக் கேள்வியெழுப்பினார்கள்.

கடை உரிமையாளரை எம்.என்.எஸ் தொண்டர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க : உயிருக்கு எமனான ஏசி.. காருக்குள் தூங்கும் நபர்கள் உஷார்.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com