‘பாகிஸ்தானியர்களை அடையாளம் காணுங்கள்’: மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா உத்தரவு

Amit Shah: ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாகிஸ்தானியர்களை அடையாளம் காணுங்கள் என்றும் அவர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

Published on: April 25, 2025 at 7:23 pm

புதுடெல்லி, ஏப்.25 2025: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை அனைத்து முதலமைச்சர்களுடனும் பேசினார். தொடர்ந்து, “அந்தந்த மாநிலங்களில் உள்ள பாகிஸ்தான் நாட்டினரை அடையாளம் காண வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் பற்றி மத்திய அரசுக்குத் தெரிவிக்குமாறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதையடுத்து, அவர்களின் விசாக்களை ரத்து செய்யுமாறும் அமித் ஷா கேட்டுக் கொண்டார். மேலும், பாகிஸ்தானுக்கு அந்நாட்டு மக்கள் விரைவாகத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர்களைக் அமித் ஷா கேட்டுக் கொண்டார். முன்னதாக, சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய அரசாங்கம் புதன்கிழமை (ஏப்.23 2025) அறிவித்தது.

மேலும் சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் கெடு விதித்தது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் இல்லங்கள் IED கொண்டு தகர்ப்பு..!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com