வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு; அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து.!

MRK Panneerselvam in Asset accumulation case: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Published on: April 25, 2025 at 2:24 pm

Updated on: April 25, 2025 at 2:28 pm

சென்னை ஏப்ரல் 25 2025: தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட விடுதலை தீர்ப்பை ரத்து செய்து மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு கடலூர் நீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்ப்பை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.​

இந்த வழக்கில், 2006 முதல் 2011 வரை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அமைச்சர் பதவியில் இருந்த காலத்தில், பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி, மகன் பி.கதிரவன் ஆகியோர், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக ₹3 கோடி மதிப்புள்ள சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ​

இதுகுறித்த வழக்கில், கடலூர் நீதிமன்றம் மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், நீதிபதி பி.வேல்முருகன், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டி நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், குற்றச்சாட்டுகளை பதிவு செய்து 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு.. துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com